Search This Blog

Thursday, July 28, 2011

ஈரோட்டில் புத்தகக்கண்காட்சி


ஈரோட்டில் புத்தகக்கண்காட்சி ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஈரோடு வ.உ.சி பூங்காவில் நடைபெறுகிறது. தினமும் கண்காட்சி காலை பதினோரு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை கண்காட்சி நடைபெறும் கொங்குமண்டலத்தில் புத்தக வாசிப்பு பழக்கத்தையும், புத்தகச்சந்தையையும் ஈரோடு புத்தகக்ககாட்சி உருவாக்கியுள்ளது.

ஈரோட்டில் நடைபெறும் மாபெரும் திருவிழாவாகவும், விருந்தினர்கள் பெருவாரியாக திரளும் சக்தியாக இப்புத்தகக்கண்காட்சி உருவாகியுள்ளது. இப்புத்தகக்காட்சியை பொறுப்பேற்று நடத்தி வருபவர் அண்ணன் ஸ்டாலின் குணசேகரன் ஆவார். இவர் ஈரோடு மக்கள் சிந்தனை என்ற அமைப்பை நடத்தி வரும் கம்யூனிசிய மற்றும் சமூகநலவாதி ஆவார். இவருடைய 'விடுலை வேள்வியில் தமிழகம்' (பாகம் 1 & 2 ) மிகவும் புகழ்பெற்றதாகும். தமிழகத்திலிருந்து இந்திய சுதந்திரப் போரில் பங்கு கொண்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றை சேகரித்து தொகுக்கப்பட்ட நூல். தென்னிந்தியப் புரட்சி முதல் சிறைச்சாலைக் கொடுமைகள் வரை 100 கட்டுரைகள் இந்நூலில் எழுதி ஸ்டாலின்குணசேகரன் தலைநிமிர்ந்துள்ளார்.

ஈரோடு புத்தகக்கண்காட்சியில் என்னுடைய பதிப்பக கடை எண்: 154 , என்னுடைய சாஃப்ட்வியூ நிறுவன பிரதிநிதி சாமிக்கண்ணன் கடையில் இருப்பார். (9840078699) அனைவரும் வருக.

Sunday, July 24, 2011

தமிழும் கணிப்பொறியும் : 4ஆம் பதிப்பு


தமிழும் கணிப்பொறியும் : தமிழக அரசின் சிறந்த நூல் விருதினை பெற்ற பெருமைக்குரிய தகவல் தொழிற்நுட்ப புத்தகமாகும். மா.ஆண்டோ பீட்டர் எழுதி, சாஃப்ட்வியூ பதிப்பகம் இந்நூலின் நான்காம் பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்நூலின் வாழ்த்துரை கடந்த அதிமுக அரசில் சபாநாயகராக இருந்த டாக்டர்.காளிமுத்து எழுதியுள்ளார்கள்.

ஓலைச்சுவடி முதல் அச்சு வரை தமிழ் நிலை, கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி, தமிழ்மின்னணு மற்றும் மென்பொருட்களின் சாதனைகள், மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகிய அத்தியாயங்கள் தமிழ்க்கணினி வரலாறுகளை இந்நூல் எடுத்துரைக்கிறது. தமிழ் எழுத்துக்களை வடிவமைப்பது எப்படி, தமிழ் எழுத்துருக்கள் பொருத்தும் முறைகள், தமிழ் எழுத்துரு வடிவமைப்பதில் சிக்கல்கள், யுனிகோட் ஆகிய பாடங்கள் கம்ப்யூட்டரில் ஃபாண்ட்ஸ் அடிப்படைகள் மற்றும் பயன்படும் விதத்தை விளக்குகிறது. முக்கிய தமிழ் இணையங்கள், தமிழ் இணையங்கள் அமைப்பதற்காக வழிமுறைகள் ஆகிய பாடங்கள் தமிழ் இணையங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறியுள்ளன. முக்கியமான தகவல் தொழிற்நுட்ப கலைச்சொற்களின் பட்டியலும் இந்நூலை அலங்கரித்துள்ளது.

தமிழ் இணையப்பட்டியல்கள், தமிழ் தகவல் தொழிற்நுட்ப அறிஞர்கள் மற்றும் நிறுவனங்களின் முகவரிகளும் தொகுத்தளித்திருப்பது அனைவருக்கும் பயன்படும் படியாகவுள்ளது. கம்ப்யூட்டரில் தமிழ், பயன்பாடு, அதை இயக்கும் விதம் மற்றும் அது இயங்கும் விதம் ஆகியவற்றை தெள்ளத் தெளிவாக ஆழமாக இந்நூல் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.


நூலின் பெயர் : தமிழும் கணிப்பொறியும்
ஆசிரியர் பெயர் : மா. ஆண்டோ பீட்டர்
மொத்த பக்கங்கள் : 160
விலை : ரூ. 90/=
கிடைக்குமிடம் : சாஃப்ட்வியூ, 118, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-600 029. தொலைபேசி: 044-23741053, 9840738676

Saturday, July 23, 2011

ஈழம்: ராணி, மகாராணி


ஹிலாரி கிளிண்டன் தமிழக முதல்வரை நேரில் கண்டது பெருமைக்குரிய விசயமாகும். தமிழக முதல்வர் ஹிலாரி கிளிண்டனிடம் ஈழப்பிரச்னையை வலியுறுத்தியுள்ளது அதைவிட மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்.

”இலங்கையில் போர் முடிந்து இரண்டு வருடம் ஆகியும் மக்கள் வசதியற்ற முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசை அமெரிக்க அரசு வற்புறுத்த வேண்டும்” என்று ஹிலாரி கிளிண்டனிடம் கேட்டுக்கொண்டுள்ளார் தமிழக முதல்வர்.

”இலங்கையில் நிரந்தர அமைதி நிலவ அமெரிக்க அரசு பல வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். நியூஜெர்சி மகாண சட்டசபையும் இவர்களுடைய சந்திப்புக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

”முகாமில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும், இலங்கை கடலோர காவல் படையினர் ராமேஸ்வர மீனவர்களை சுட்டு தள்ளும் கொடுமையினை நிறுத்த வேண்டும்” என்றும் இலங்கை தூதர் பிரசாத்கரியவாசத்திடம் வலியுறுத்தி உள்ளார் முதல்வர்.

இலங்கையில் ”தமிழீழம்” அமைந்தால் தமிழ் மக்கள் உங்களுக்கு என்றும் நன்றி உணர்வுடன் இருப்பார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை என்றென்றும் மறக்க மாட்டார்கள் தமிழீழ மக்கள்...அவர்கள் மனதில் என்றென்றும் ராணியாக, மகாராணியாக இருக்கலாம்.

Wednesday, July 20, 2011

ஜூலை 19 : சிஎஸ்சிக்கு கருப்பு தினம்


சிஎஸ்சி கம்ப்யூட்டர் எஜூகேஷனின் நிறுவனர் திரு.த.அய்யம்பெருமாள் (வயது 56) காலமானார். விருதுநகரில் பிறந்த இவர் எம்ஈ பட்டம் பெற்றவர். தமிழகம், புதுவை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையில் 525 கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். தமிழகத்தின் கணிப்பொறி வரலாற்றில் பட்டிதொட்டியெங்கும் கணிப்பொறி பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். அவருடன் இணைந்து 83 சிஎஸ்சி கிளை அனிமேஷன் துறைக்காக நடத்தி வருகிறேன். சிஎஸ்சி நிறுவனத்தில் ஆண்டுதோறும் 1,80,000 பேர் கணிப்ப்பொறி பயிற்சி பெற்று வருகின்றனர். ஜூலை 19 (செவ்வாய்க்கிழமை) மாலை 8.45 அளவில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கடும் மாரடைப்பால் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு ஆதம்பாக்கத்தில் 20ந் தேதி மாலை நடைபெற்றது. அன்னாரின் அஸ்தி பெசன்ட்நகர் கடற்கரையில் இன்றே கரைக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு சிஎஸ்சியின் விருது நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். அக்காலக்கட்டத்தில் ஐடித்துறை நசிவடைந்து மோசமாக இருந்தது. அச்சூழலிலும் நிர்வாகம் அடிபடாமல், தடையின்றி முக்கிய கருவியாக செயல்பட அய்யம்பெருமாளின் ஆலோசனைகள் இருந்தன. ஆகையால் அன்று அவரை "இரும்பு மனிதர்" என்று அழைத்தேன். இன்று அந்த இரும்பு தரைமட்டமாகிவிட்டது. தமிழகத்தில் இலட்சக்கணக்கில் கணினி படித்த மாணவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கில் பணிபுரியும் சிஎஸ்சி ஊழியர்கள் அனைவருக்கும் ஜூலை 19 கருப்பு தினம் தான். கணினி உலகில் சுறுசுறுப்பான தமிழனை நம் மண் இழந்துவிட்டது.

Sri.IyemPerumal interview in Microsoft's bhashaindia:
http://bhashaindia.com/Patrons/SuccessStories/ta/pages/Iyamperumal.aspx

கீழே ஸ்ரீ.அய்யம்பெருமாள் அவர்களிடம் தங்கள் கண்ட அனுபவங்களையும், குறிப்புகளையும் எழுதினால், அவரைப்பற்றி நர்ன் எழுதும் நூலுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

Thursday, July 14, 2011

கணினித்தமிழுக்கு உயிர்ப்பிச்சை தேவை: தினமணி தலையங்கம் (14.7.2011)



கணினியில் தமிழ் பயன்பாடு 1980 ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகம் நூலக பயன்பாட்டிற்காக உருக்கியதாக வரலாறு கூறுகிறது. சுமார் 32 ஆண்டுகள் கணியியில் தமிழ் பயன்பாடு இருந்தும் பல குழப்பநிலைகளே உள்ளது. கணினித் தமிழுக்கென சீரான முறையோ, உலக அரங்கில் ஒருங்கிணைப்போ, கணித்தமிழ் வளர்ச்சி திட்டமோ, எம்என்சி நிறுவனங்களில் கூட்டுப்பணியோ இல்லை. ஒரு கணினியில் பயன்படுத்திய உரையை, பிற கணினியிலும் பார்க்க பொதுவான எழுத்துரு தேவைப்பட்டது. இன்றும் பதிப்பு மற்றும் அச்சுப்பணிக்கு தேவைப்படுகிறது. இணையத்தை அனைவரும் பார்வையிட எழுத்துருவை கண்டிப்பாக டவுண்லோட் செய்ய வேண்டிய நிலையுள்ளது. இக்கவலைகளை போக்குவதற்கே 'யுனிக்கோட் தமிழ்' பிறந்துள்ளது. வருங்காலத்தில் யுனிக்கோட் தமிழே நிலைக்கும். யுனிக்கோட் தமிழின் அருமை அறிந்தும்., இவற்றை சீர்படுத்த அரசு தவறுகிறது. தமிழக அரசை சுட்டிக்காட்டினால் இது தகவல் தகவல்தொழில்நுட்பத்துறையின் பொறுப்பேன நினைத்துவிடுகிறார்கள். இதில் தமிழ் வளர்ச்சித்துறையின் பங்கும் 50% உள்ளது. இவ்விரு துறைகளும் கூட்டாக தமிழுக்கு முயற்சி எடுக்காததாலேயே நாம் சீரழிவை சந்திக்க நேர்கிறது. எல்லோரும் ஆங்கில விசைமுறை சீராகவுள்ளதாக கருதுகிறோம். ஆங்கில கீபோட்டு 1878ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, அதுவும் சீரான நிலையை உலக அளவில் பெற்றிட 50 ஆண்டுகள் ஆகியுள்ளது. நாமும் இப்பிரச்னையை இந்நவீன காலத்தில் சீருடன் பெற்றிட யுனிக்கோட் தமிழை வலிமைப்படுத்த வேண்டும்.

யுனிக்கோட் என்றால் என்ன? யுனிக்கோட் என்பது உலக மொழிகள் அனைத்தின் எழுத்துகளையும், குறியீடுகளையும் ஒரே கணினி குறியீட்டு முறையில் (Font) இணைத்து வடிவமைக்கும் ஒரு தொழில்நுட்ப முறையாகும். யூனிக்கோட் முறைகளின் மூலம் ஜப்பான், சீனம், கொரியா போன்ற பல சிக்கலான வரிவடிவங்களை கொண்ட மொழிகளை கூட எளிதில் கணினியில் பயன்படுத்த முடிகிறது. நாம் யுனிகோட்டில் டைப் செய்த பைலை உலகின் எந்த கணிணியிலும், எந்த நாட்டிலிருந்து திறந்து பார்த்தாலும் படித்து அச்சடிக்க முடியும். நாம் பயன்படுத்தும் ஒரே கணினியில், ஒரே பக்கத்தில், ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, ஜப்பான், சீனம், கொரியா என அனைத்து மொழிகளையும் செலவின்றி பயன்படுத்தலாம். தொழில்நுட்பம் மூலமாக சார்ந்து, எந்த மொழி வளர்கிறதோ அந்த மொழியே அழியாமல் இருக்கும். தமிழை வளப்படுத்த யுனிகோட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நாம் யுனிகோட்டில் டைப் செய்த ஒரு தமிழ் பக்கத்தை (பைலை) அலுவலக கணினி, லேப்டாப் கணினி, அச்சு, பதிப்பகம், இணையம் மற்றும் செல்பேசி என அனைத்து தொழில்நுட்பத்திலும் சிக்கலின்றி பார்த்து படித்துக் கொள்ளலாம். யுனிக்கோட் எழுத்துருக்கள் அதிகளவில் இலவசமாகவும், குறைந்த விலைகளிலும் கிடைக்கின்றன. யுனிக்கோட்டினால் கணினி மற்றும் இயங்குதளங்களின் செயல்படும் வேகம் அதிகரிக்கின்றன. நாம் ஆயிரக்கணக்கான பக்கங்களை சில நொடிகளில் பிரிண்ட் எடுக்கலாம். எந்த கணியிலும் யுனிகோட் எழுத்துருவை பதிக்கவோ, டவுண்லோட் செய்யவேண்டிய அவசியமோ இல்லை.
தமிழக அரசு தமிழில் வர்த்தக எழுத்துருக்களை ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியாக விலை கொடுத்து வாங்குகிறது. ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியாக இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி பதிவு எண்களை பாதுகாக்க வேண்டும். இணைய பயன்பாட்டிற்காக தனித்தனியாக டவுண்லோட் செய்ய வேண்டும். யுனிகோட் எழுத்துரு உலக மொழிக்கே பொதுவானதால் இச்சிக்கல்கள் இன்றி பயன்படுத்தலாம். ஆனால் இதை முழுமையாக இணைய விரும்பிகளே பயன்படுத்துகிறார்கள். அரசுப்பணியில் பயன்பாடு இன்றி அவல நிலையில் உள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா விசா பெறுதற்காக சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு சென்றிருந்தேன். அமெரிக்க தூதரகத்தில் விசாவிற்கு நேர்காணல் வைத்தே விசா தருவார்கள். இதை அமெரிக்கர்களே நடத்துகிறார்கள். நேர்காணலின் போது எதற்கு, ஏன் அமெரிக்க செல்கிறீர்கள் என கேட்டார்கள். அப்போது நான் அமெரிக்காவில் தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழை வளர்க்க அமெரிக்காவில் மாநாடு நடைபெறுகிறது என்று கூறினேன். அமெரிக்காவில் எம்என்சி கம்பெனிகள் அதிகம் உள்ளதால் தமிழின் வளர்ச்சி விவாதங்களும், ஆராய்ச்சிகளும் தமிழகத்திற்கு உதவும் என்று கூறினேன். தமிழகத்தின் அனைத்து கணினிகளில் வேலை செய்யும் அனைத்து ஸாப்ட்வேர்களும் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படுவதாக கூறினேன். புன்முறுவலுடன் தமிழகத்திற்கு பயனுள்ளதாக உள்ளதா? என்று கேட்டார், தலையாட்டினேன். உங்கள் பணி தமிழையும், எலெக்ட்ரானிக்ஸையும் இணைக்கிறதென கூறினார். சில நொடிகளில் அவர் புரிந்து கொண்டதை எண்ணி பெருமை அடைந்தேன். தமிழும், கணினியும் பல செயலாக்கங்களை வருங்காலத்தில் செய்யவுள்ளது. அவர் புரிந்து கொண்டதை தமிழக அரசின் தகவல்தொழில்நுட்பத்துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. யுனிகோட் சம்பந்தமாக பிரச்னைகளை சந்தித்தால் தமிழக அரசு உடனடியாக பணிக்குழுவை உருவாக்கி பிரச்னைகளை சமாளிக்கிறது. ஆனால் நிரந்தரதீர்வை ஏற்படுத்தும் எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை. தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிலும் தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளதது வருத்தத்தை அளித்தது. தகவல்தொழில்நுட்பத் துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் இணைந்து இணைந்து தனி வாரியமோ அல்லது அரசு நிறுவனமோ துவக்கவேண்டும்.

யுனிகோட் கன்சார்ட்டியத்தில் தமிழக அரசு உறுப்பினராக வேண்டும். உறுப்பினராக இருந்தால் தானே பன்னாட்டு அறிஞர்களின் அறிவையும் நம் மொழிக்கு பெறமுடியும். நம் மொழி சார்ந்த பிரச்னைகளை நிவர்த்தி செய்ய முடியும். தமிழக அரசு 9.75 லட்சம் லேப்டாப்புகளை தேர்தல் அறிக்கைப்படி அளிக்கவுள்ளது. மாணவர்கள் பலன் பெறவுள்ள வரவேற்க வேண்டிய திட்டமாகும். இந்த லேப்டாப்களில் தமிழ் மென்பொருட்கள் அளிக்கப்படுகின்றன. லேப்டாப்பின் அடிப்படை ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை தமிழில் அளித்திட சிந்தனையில்லாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இதற்கான தொழில்நுட்பங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் உள்ளன.
லேப்டாப்பில் உள்ள கீ-க்களையே தமிழில் பொரித்து அளிக்கலாமே? லேப்டாப்பில் உள்ள கீ-க்கள் தமிழில் இருந்தால் குறைந்தபட்சம் 20% மாணவர்களாவது தமிழ் தட்டச்சு அறிவை பெறுவார்கள். லேப்டாப்பை டெண்டர் அடிப்படையில் விநியோகிக்கும் நிறுவனங்களை தமிழக அரசாணைப்படி ‘தமிழ்99’ விசைமுறைகளைப் பெற்ற விசைகளுடன் லேப்டாப்களை தயாரிக்க உத்தரவிடவேண்டும். பள்ளிக்கல்லூரி மாணவர்கள் சுலபமாக தமிழ் உள்ளீட்டை லேப்டாப் மூலமாக செய்வார்கள்.

ஆசிய அளவில் தமிழ்நாட்டில் தான் அதிக அளிவில் செல்போன்கள் தயாரிப்படுகின்றன. இந்த செல்போன்களையும் தமிழை கண்டிப்பாக பொரித்து தரப்படுத்தலாமே? தமிழ் விசைகளோடு தான் செல்போன்களை விற்கவேண்டுமென தரமுறையை உருவாக்கலாமே?
தமிழக அரசின் இணய தளங்கள் தமிழக கிராமப்புற மக்களுக்காக தான் இயங்குகின்றன. அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் அரசு சேவைகளையும், தேவைகளையும் பெறுவதற்கே இணையங்களை தமிழக அரசுத்துறைகள் நிறுவிவருகின்றன. இந்த இணையங்களை ஏன் தமிழில் நிறுவுவதில்லை என்பது தெரியவில்லை. தமிழக அரசின் அனைத்து இணையங்களும் தமிழில் மாற்றம் செய்யவெண்டும்.

தமிழ் இணையப்பல்கலைக்கழகம் தான், தமிழக அரசின் தமிழ்க்கணினி பணிகளை செய்வதாக கூறுகிறார்கள். அந்நிறுவனத்தின் தமிழ்க்கணினி பணி தோய்வு நிலையிலேயே உள்ளது. கல்விப்பணியைப்ணியை மட்டும் அந்நிறுவனத்திற்கு ஒதுக்கி தமிழக அரசின் தமிழ்க்கணினி பணிக்காக தனி வாரியமோ அல்லது அரசு நிறுவனமோ துவக்கவேண்டும்.
ஒரு தொழிற்சாலை துவக்கவேண்டுமென்றால், மாசுக்கட்டுப்பட்டு வாரியத்தில் தரச்சான்றிதழை பெறவெண்டும். அதே போல் தமிழகத்தில் தயாரிக்கப்படும் அனைத்து மின்னனுவியல் தயாரிப்புகளும் "தமிழ்சார் தரக்கட்டுப்பாட்டை" அளித்த பின்பே விற்பனைக்கு வரவேண்டும். மின்னனுவியல் தயாரிப்புகளுடன் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பயனாளர் கையேடுகள் தமிழில் வெளியிட வலியுறுத்த வேண்டும். நம் மொழியோடு குறைந்த மக்கள் தொகையுள்ள மொழிகள் கூட தத்தம் நாடுகளில் இவ்விதிகளை கையாளுகின்றன.

தமிழ்க்கணினி பயன்பாடுகள் பள்ளி மற்றும் கல்லூரி பாட்த்திட்டத்தில் சேர்த்திடல் வேண்டும். பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு தமிழ்க்கணினி சேவைகளையும், கலைச்சொற்களையும் ஊட்டினால் சமுதாய மாற்றத்தை காணலாம். மேலும் பல அரசு திட்டங்கள் கிடப்பில் தான் உள்ளன. யுனிகோட் தமிழ் மற்றும் பல்வேறு மின்னனு தமிழ்ப்பணியாக்கங்களுக்கு மனுக்களும், கோரிக்கைகளும் எங்களைப்போன்ற தொழில்நுட்பவாதிகள் அளித்து கடும் களைப்பை தான் கண்டுள்ளோம். சிறப்பான நலப் பணிகளை செய்து வரும் புதிய தமிழகஅரசு தமிழ்ப்பற்றுடன் கணினித்தமிழ்ப் பணிக்களை முடுக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசையாகும். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் பல நாடுகள் தமிழக அரசின் தமிழ்க்கணினி மேம்பாட்டு பணிகளையும், அரசாணைகளையும் உற்று நோக்குகிறார்கள். தமிழ்க்கணினி வளர்ச்சிக்கு உலகநாடுகள் தமிழக அரசின் அரசாணையையே தத்தம் நாடுகளில் கையாளுகிறார்கள். தமிழக அரசும் தோய்வின்றி தமிழ்க்கணினி பணிக்கு நவீன திட்டப்பணிகளை செய்து உலக தமிழன் மனதில் இடம் பெறவேண்டும்.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=446053&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88




Wednesday, July 13, 2011

வணிக கதிரின் அட்டைப்படம்


வணிக கதிர் மாத இதழின் ஜூலை மாத அட்டைப்படம் என்னை அலங்கரித்து, என்னுடைய பேட்டியை வெளியிட்டமை, என்னை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. என்னுடைய பேட்டியையும் இணைத்துள்ளேன்.
http://www.softview.in/vanigakathir.pdf

Monday, July 11, 2011

சூடானைப் போல் தமிழனுக்கு ஈழத்தை சூடு


உலகின் 193வது நாடு மற்றும் ஆப்பிரிக்காவின் 53வது நாடாக சூடான் உதித்துள்ளது. ஆப்பிரிக்காவில் சூடான் நாடுதான் இன்று வரை, பரப்பளவில் பெரிய நாடாக இருந்தது. அந்த நாட்டில் கனிம வளங்கள் அதிகம். அதனைக் குறிவைத்து, 100 ஆண்டுகளுக்கும் மேலாக சூடானை மேற்கத்திய நாடுகள் ஆக்கிரமித்திருந்தன. பிறநாடுகளின் ஆதிக்கத்திலிருந்து சூடான் விடுபட்டாலும், தெற்குசூடான் மக்கள் மட்டும் ‘அடிமை வாழ்வு’க்குள்ளாக வேண்டிய அவலம் நீடித்தது. கருப்பர் இன மக்களைடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அடிமையை வெட்டியெறிந்து இன்று சூடானுக்கு விடுதலை கிடைத்துள்ளது. பல நாடுகள் உருவாகுகின்றன, தமிழனுக்கு ஈழநாடு எப்போது உருவாகும். தமிழக முதல்வரின் தமிழக சட்டசபை தீர்மானமும் இலங்கை மக்களுக்கு பேராதரவையும், மனநிறைவையும் அளித்துள்ளது.

உலகின் மிக சிறியநாடு வாட்டிகன், இந்நாட்டை நடந்தே பார்த்துவிடலாம். அழகான நாடுகளில் லக்ஸம்பர்க்-கும் ஒன்று. இந்நாட்டை பேருந்து மூலமாக 30 நிமிடங்களில் பார்த்துவிடலாம். இவையெல்லாம் இருக்க 3கோடி மக்கள் தொகையுடைய ஈழத்தமிழனுக்கு தனிநாடு அளிக்க கூடாதா? அகதிகளாக உலகமெங்கும் தமிழன் தலை குனிந்து வாழவேண்டுமா? ஐநா மற்றும் உலக அமைப்புகள் ஈழத்தமிழனுக்கும், ஈழமண்ணிற்கும் ஆதரவு தாருங்கள். ஈழ மக்களிடையே அந்நாட்டின் சர்வாதிகார மன்னனுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்துங்கள். தனி அங்கீகாரம் அளித்து உலக அரங்கில் ஈழத்திற்கு பெருமை சேருங்கள். ஈழ மண்ணின் ஒவ்வொரு மண் துகள்களும் உலக அரங்கிற்கு விசுவாசமாக இருக்கும்.

Thursday, July 7, 2011

நல்லதோரு குடும்பம் பல்கலைக்கழகம்


அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் மலேசிய தமிழ் நண்பர்களுக்கும், எனக்கும் முக்கிய தூண்டுகோலாக இருந்தவர் கவியரசன். அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் கடைசி இரண்டு நாட்கள் கொலம்பஸ் ஓகியோவிலுள்ள கவியரசன் வீட்டில் ஒய்வுக்காக தங்கினோம். வெகுநாட்களுக்கு பின் தமிழகத்தில் சுவைக்கும் மீன்குழம்பு முதல் ரஸ்தாளி வரை தின்று மகிழ்ந்தோம். முழுக்கமுழுக்க தமிழக உணர்வை சுவாசித்தோம். கவியரசன் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்: தமிழ் உணர்வு, பண்பாடு, மரியாதை, உடை, ஒழுக்கம் என பட்டியலிட முடியாத பலவற்றையும் கவியரசனின் மனைவி முத்துமாரி (அண்ணி) குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்துள்ளார். இவர் சுறுசுறுப்பான மங்கை, சுவையான சமையற்காரி மற்றும் சுட்டியான அம்மா ஆவார். இவர்களுக்கு பாவை மற்றும் கவின் என பொறுப்பான மழலைகள் உள்ளனர். என்னை பாவை வங்கி மற்றும் கடைதெருவிற்கும், கவின் கொலம்பஸ் மிருகக்காட்சி சாலைக்கும் இட்டுச்சென்றனர். இவர்கள் நால்வரும் அமெரிக்காவில் வேலைப்பொறுப்பில் உள்ளது, மகிழ்வுதரும் அம்சமாகும். கவியரசனின் பல்கலைக்கழகம் அருகே இரு கலைக்கல்லூரிகளும் உள்ளன. இவை கவியரசனின் தம்பி தமிழ்மணிகண்டன் மற்றும் அண்ணியின் தம்பி பத்மாவின் குடும்பமாகும். கலைக்கல்லூரிகளும் சுவையான தமிழக உணவை அமெரிக்காவில் போட்டிபோட்டு படைத்தனர். தமிழ்மணிகண்டன் என்னை கொலம்பஸ் நகரை சுற்றிக்காட்டினார். மொத்தத்தில் கொலம்பஸின் அனைத்து இல்லங்களிலும் தமிழ் மணம் வீசியது.

நியூயார்க் 'முரட்டுக்காளை'


நியூயார்க்கின் ட்வின் டவர், டைம்ஸ் ஸ்கொயர், வேர்ல்ட் ட்ரேடு சென்டர், எம்பயர் எஸ்டேட், சுதந்திரதேவி சிலை என நியூயார்க்கில் அனைத்தையும் சுற்றி மகிழ்ந்தோம். எங்கள் அமெரிக்க சுற்றுலா அணி நியூயார்க் சென்ற மாலை மிகவும் களைப்பான நாள். ஆனாலும் நியூயார்க்கில் இரவெல்லாம் சுற்றினோம். நியூயார்க் நகரம் உலகின் நிதிக்கான தலைநகரமாகும். நியூயார்க்கில் காலடி வைத்தமை மதிப்பான உணர்வை அளித்தது. களைப்பிலும் பங்குச்சந்தைக்கு அடித்தளமான "வால் ஸ்டீரிட்" செல்லவேண்டும் என்ற ஆவல் மிகவும் உறுத்தியது. வால் ஸ்டீரிட்டிற்கு நடந்தே சென்றோம். பணக்காரர்களின் நடமாட்டமும், அயல்நாட்டு நிறுவனங்களின் தோற்றமும், உலகத்தலைவர்களின் அறிவிப்புமுடைய நடைபாதையும் வால் ஸ்டீரிட்டை அலங்கரித்தன. பங்குசந்தையின் அடையாளச் சின்னமான "காளை" வால் ஸ்டீரிட்டில் பிரம்மாண்டமாக உள்ளது. அயல்நாட்டிலிருந்து வருகை தரும் அனைவரும் முரட்டுக்காளையின் அருகே நின்று அதன் கொம்புடனும், கொட்டையுடனும் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இரவு பங்களாதேஷி ஒட்டலில் சாப்பிட்டமை சுவையை அளித்தது. நியூயார்க் இரவு இனிமையான இரவாகும்.

Wednesday, July 6, 2011

நயாகரா குறவஞ்சி


அமெரிக்க பயணத்தில் நெஞ்சையும், மனதையும் குளிர வைத்த நாள் "நயாகரா பயணம்" செய்த நாள். அழகு, குளிர், மென்மை, அதிசயம், வெள்ளம், சாரல் ஆகியவற்றின் உலகின் 'அதிசய மூலை' என சொல்லலாம். வாழ்வின் குளிரையும், பிரமிப்பையும் அசர வைத்த நாள். அமெரிக்க மற்றும் கனடா நாட்டை இணைக்கும் முனையில், பப்பல்லோ என்ற நகரின் அருகில் நயாகரா அருவி உள்ளது. நயாகரா ஆற்றிலிருந்து அருவியின் அருகில் சென்று வட்டமிட படகு சவாரியும் உள்ளது. படகில் செல்லும் போது நாம் அருவியில் நனையாமல் இருக்க மழை சட்டையும் அளிக்கப்படுகிறது. ஒரு குற்றலாத்திலே இரவெல்லாம் கும்மாளம் போடுவோம், ஆயிரம் குற்றாலத்தை ஓரே நேரத்தில் ஒரே சடையாக பார்த்தால் அதிசயம் தானே... நயாகரா படகில் நண்பர் ஆண்டவர் தன் தந்தையின் நயாகரா குறவஞ்சியையும் அள்ளி வீசினார்.

Friday, July 1, 2011

அமெரிக்கா சுற்றுலா அணி


பத்தாம் தமிழ் இணைய மாநாடு முடிந்த மதியமே அமெரிக்க சுற்றுலாவிற்கு தயாரானோம். கவியரசன் தலைமையில் எட்டு பேர் இருக்கையாக அமரக்கூடிய டயோட்டா ரதத்தில் சுற்றுலா துவங்கினோம். எங்களுடன் ஆண்டவர் மற்றும் மலேசிய இளைஞர் தமிழ்ப்படையும் வந்தது. சரவணன், செல்வா, நாரா, இளந்தமிழ் ஆகிய நால்வரும் நான்கு தூண்களாக சுற்றுலாவில் இருந்தனர். இனிமையான மாலைப்பொழுதில் வாஷிங்டன் பாராளுமன்றத்தை சென்றடைந்தோம். இப்புகைப்படத்தின் முன்புறம் அமெரிக்க பாரளுமன்றமும், பின்புறம் லிங்கன் ஸ்கொயரும் உள்ளது. உலகின் தலைநகராகிய வாஷிங்டன் சென்றடைந்த மகிழ்ச்சியில் உறங்கினேன். தூங்கிய ஓட்டலின் பில் தான் அடுத்தநாள் சற்று கலக்கத்தை கொடுத்தது. காலையே சுற்றுலா தலைவர் கவியரசன் அசராது ரதத்தை ஒட்டத்துவங்கினார்.