Search This Blog

Saturday, March 17, 2012

வேர்கள் வெளியீடு: சின்னத்திரை நடிகை ஹரிப்பிரியா


என்னுடைய சாஃப்ட்வியூ ஊடக கல்லூரி மாணவர்களின் பயிற்சி இதழான ”வேர்கள்” மார்ச் மாத இதழை சின்னத்திரை நடிகை ஹரிப்பிரியா வெளியிட இதழின் ஆசிரியர் முகமது ஹுசைன் மற்றும் துணை ஆசிரியர் சசிக்குமார் பெற்றுக்கொண்டனர்.

ஹரிப்பிரியா 2010 ஆண்டு சாஃப்ட்வியூ ஊடக கல்லூரியில் பயின்ற மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிப்பிரியா கனாக்காணும் காலங்கள் (விஜய் டிவி) மற்றும் மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் (ஜீ டிவி) தொலைக்காட்சி சீரியலில் கதாநாயாகியாக நடித்துள்ளார்.





Friday, March 16, 2012

வேர்கள் மாணவர்கள் இதழ்


சாஃப்ட்வியூ விசுவல் கம்யூனிகேஷன் நிறுவனம் விசுவல் கம்யூனிகேஷன், ஜர்னலிஸம் மற்றும் புகைப்படக்கலை டிப்ளோமக்களை தமிழில் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இப்பயிற்சியில் ஈடுபடும் இதழியல் பாடப்பிரிவினர் வேர்கள் என்ற மாணவர்கள் இதழை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். மார்ச் மாத வேர்கள் இதழை இணைத்துள்ளேன். மாணவர்கள் படைத்துள்ள இவ்விதழை முழுமையாக படித்து கருத்து சொல்லவும்.



வேர்கள் மாணவர்கள் இதழ்:
http://www.softview.in/vergal11.php  







Friday, March 9, 2012

குழந்தைகள் கலைக்களஞ்சியம் குறுந்தகடு வெளியீடு


சென்னை மாநிலக் கல்வி அமைச்சராகத் திகழ்ந்த திரு தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்தோடு 1946-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்பெற்றது.   இந்திய மொ ழிகளில் 10 தொகுதிகளைக் கொண்ட விரிவான கலைக் களஞ்சியம் தமிழில் தான் முதன் முதலாக வந்தது என்பது பெருமைப்படத்தக்க செய்தியாகும். இதைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஓர் ஒப்பு உயர்வற்ற ஆக்கபூர்வமான தமிழ்த் தொண்டாகக் கருதலாம். இவற்றிற்கு 2240 அறிஞர்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றனர்.

'கலைக்களஞ்சியம்' என்னும் பொருள் (Encylopedia) பொதிந்த சொல்லைத் தமிழகத்திற்கு வழங்கிய பெருமையும் தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கே உரியதாகும்இச்சொல் தமிழ் வழக்கிலும் வேரூன்றி நிலைத்துவிட்டது.

பொதுக் கலைக்களஞ்சியத்தைத் தமிழில் முதல் பதிப்பாகத் திறம்பட வெளியிட்டுச் சிறந்த அனுபவம் பெற்ற தமிழ் வளர்ச்சிக் கழகம், 1968-இல் குழந்தைகளுக்கெனத் தனியே அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கப்படங்களுடனும் கூடிய சிறந்ததொரு குழந்தைகள் கலைக்களஞ்சியத்தைப் பத்துத் தொகுதிகளில் முதல் பதிப்பாக வெளியிட்டது. 1968-இல் தொடங்கப்பட்ட குழந்தைகள் கலைக் களஞ்சிய முதல் பதிப்புப் பணி மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 1976-இல் திறம்பட நிறைவேறியது. குழந்தைகள் கலைக் களஞ்சியம் முதற் பதிப்பிற்கும் திரு. . . பெரியசாமித்தூரன் அவர்களே தலைமைப் பதிப்பாசிரியராக விளங்கினார். குழந்தைகள் கலைக்களஞ்சியம் முதல் பதிப்பின் மாதிரிப் படிவம் ஒன்றை 22-03-1965-இல் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டது.



குழந்தைகள் கலைக்களஞ்சிய சிறப்புகள்:

·              சிறுவர்களுக்குப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி அவர்தம் பொது அறிவையும், அறிவியல் அறிவையும் வளர்க்கும் நேர்த்தியான அறிவுக் கருவூலம்.

·              இக்களஞ்சியம் பல்வேறு அழகிய வண்ணப்படங்களும், விளக்கப் படங்களும் நிறைந்து சிறந்து விளங்குவது.

·              இதன் உள்ளடக்கம் எளிய, இனிய தமிழ் நடையில், பல்துறை அறிவு பற்றிய சிறுசிறு கட்டுரைகளாக அமைந்துள்ளது.

·              அகரவரிசையில் அமைந்த 10 தொகுதிகளைக் கொண்டது; ஒவ்வொரு தொகுதியும் 96 பக்கங்களைக் கொண்டது.

·              பெயர் அளவில் குழந்தைகள் கலைக் களஞ்சியம் என்றாலும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் யாவரும் படித்துப் பயன்பெறும் வகையில் தரம்மிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளது.

·              எல்லாத் துறைகளிலும் மக்களுக்குத் தெரிய வேண்டிய இன்றியமையாப் பொருள் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

·              இந்திய மொழிகளில் முதலில் தோன்றிய சிறப்பானதொரு குழந்தைகள் கலைக் களஞ்சியம் இதுவேயாகும்.

·              எல்லா நூலகங்களிலும் இன்றியமையாது இடம்பெற வேண்டியது இக்களஞ்சியம்.              இக்களஞ்சியத்தின் ஒவ்வொரு தொகுதியும் ஓர் அறிவுக் கருவூலம்.

குழந்தைகள் கலைக்களஞ்சியம் மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்ததால் அதற்குப் பொதுமக்களிடமும்மாணவர்களிடமும் சீரிய வரவேற்பிருந்தது. அன்றைய தமிழ்நாடுஅரசு குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் திருந்திய இரண்டாம் பதிப்பின் மறு பதிப்பைத் தமிழ்நாடு பாடநூல்  நிறுவனத்தின் வழி வெளியிட்டு, 10,000 படிகள்  சிறுவர் கரும்பலகைத் திட்டத்திற்கும், முதியோர் கல்வித் திட்டத்திற்கும்  பயன்படுத்த ஏற்பாடு செய்ததுஇதை தொடர்ந்து இரு பதிப்புகள் வந்தன.

குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் பத்துத் தொகுதிகளின் உள்ளடக்க விவரங்கள் பின்வருமாறு:

தொகுதி ஒன்று:
முதல் இந்தியா வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1982
பதிப்பாசிரியர்: திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி இரண்டு:
இந்து மதம் முதல் ஔவையார் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1983
பதிப்பாசிரியர்: திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி மூன்று:
கக்கரி முதல் கும்மி கோட்டம் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1984
பதிப்பாசிரியர்:திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி நான்கு:
குயில் முதல் டார்ஜீலிங் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1985
பதிப்பாசிரியர்: திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி ஐந்து:
டால்ட்டன் முதல் நாணயங்கள் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1986
பதிப்பாசிரியர்: திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி ஆறு:
நாய் முதல் பிரிட்டன் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1986
பதிப்பாசிரியர்: திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி ஏழு:
பிரீஸ்ட்லி ஜோசப் முதல் மலை ஏற்றம் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1987
பதிப்பாசிரியர்: திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி எட்டு:
மழை முதல் லியனார்டோ-டா-வீன்சி வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1987
பதிப்பாசிரியர்: திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி ஒன்பது:
லிவிங்ஸ்ட்டன், டேவிட் முதல் வைரஸ் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1988
பதிப்பாசிரியர்: திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி பத்து:
வௌவால் முதல் ஹௌரா வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1988
பதிப்பாசிரியர்: திரு...பெரியசாமித்தூரன்

தற்பொழுது தமிழ் வளர்ச்சிக் கழகம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் குறுந்தகடு (டிவிடி) வடிவில் வெளியிட்டுள்ளது. இந்த குறுந்தகட்டின் அதிகாரபூர்வ விற்பனையாளராக சாஃப்ப்டவியூ பதிப்பகத்தை தமிழ் வளர்ச்சிக்கழகம் நியமித்துள்ளது. குறுந்தகட்டின் விலை ரூ.300/=. கிடைக்குமிடம்; சாஃப்ப்டவியூ பதிப்பகம், 118.நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-29 தொலைபேசி : 23741053, 9940666188



Friday, March 2, 2012

தமிழ்ப்பாடல்களை பாடி கின்னஸ் சாதனை

சென்னையை அடுத்த செஞ்சியிலிருந்து விசுவல் கம்யூனிகேஷன் டிப்ளமோ கோர்ஸை என்னுடைய சாப்ட்வியூ விசுவல்கம்யூனிகேஷன் மாணவர் திரு.பி.ரஹிமான் படித்தார். நல்ல திரைத்துறை ஆர்வமுடைய மாணவர்.  கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாடா, நாளைய இயக்குநர் ஆகிய நிகழ்ச்சிகளில் பணிபுரிந்துள்ளார். நவீன எடிட்டிங் துறையிலும் வல்லுநர்.

தற்போது 135 மணி தொடர்ந்து தமிழ்ப்பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். இச்சாதனை செஞ்சியிலுள்ள செயின்ட் மைக்கேல்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடை பெற்றுள்ளது. உலக அளவில் அதிக நேரம் தொடர்ந்து  பாடல்களை  பாடியதால் அவரை அசிஸிஸ்ட், யுனிக் மற்றும் லிம்கா சாதனைகள் உடனடியாக அவரை அங்கிகரித்தது. தற்போது கின்னஸ்-வும் அவருடைய சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கவுள்ளது. மின்னஞ்சல் மூலமாக கின்னஸ் அவருடைய சாதனை அங்கீகரித்துள்ளது.  மேலும் நண்பர்களுக்காக அவருடைய ஆனந்தவிகடன் பேட்டியையும் இணைத்துள்ளேன்.





43 வகையான சாலை விதிமீறல்களை இந்திய அரசு அறிவித்தது


சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அதிகபட்சம் 4 ஆண்டு சிறையும், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். இதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் சட்டதிருத்தத்தில் 43 வகையான சாலை விதிமீறல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை வருமாறு:-

 

1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.
 
2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்வது.
 
3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.
 
4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது.
 
5. ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
 
6. நம்பர் பிளேட் இல்லாமை.
 
7. பயணிகளிடம் கார் ஓட்டுனர் தவறாக நடந்து கொள்வது.
 
8. வாடகை கார்-ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பது.
 
9. வாடகை கார் டிரைவர், பயணி அழைக்கும்போது வரமறுப்பது.
 
10. இரவில் லைட் போடாமல் செல்வது.
 
11. ஹாரன் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
 
12. சைலன்சர் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
 
13. எண் சரியாக தெரியாத நம்பர் பிளேட்டுடன் வண்டி ஓட்டுவது.
 
14. சாலையில் வாகன நிறுத்தகோட்டை கடந்து சென்று நிற்பது.
 
15. சட்டத்திற்கு உட்பட்ட திசையில் வாகனம் ஓட்ட மறுப்பது.
 
16. வாகனம் ஓட்ட அனுமதி பெறாதவரை வண்டி ஓட்டச் செய்வது.
 
17. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
 
18. 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் வாகனம் ஓட்டுவது.
 
19. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்).
 
20. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (அடுத்தடுத்து செய்யும் குற்றம்)
 
21. வேகமாக வாகனம் ஓட்டுவதற்கு உடந்தையாக இருப்பது.
 
22. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்)
 
23. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (2-வது குற்றம்)
 
24. பதிவு செய்யாத வாக னங்களை ஓட்டிச் செல்வது.
 
25. மஞ்சள் கோட்டை கடப்பது.
 
26. சில ரோடுகளில் அமல்படுத்தப்படும் போக்குவரத்து தடை நேரத்தை மீறுவது.
 
27. ஒரு வழிப்பாதை, இடதுபுறம்-வலதுபுறம் செல்ல தடை, ஹாரன் அடிக்கத் தடை போன்றவற்றை மீறுவது.
 
28. வாகனங்களில் அதிக புகை வெளியேறுவது.
 
29. அதிக ஒலியுடன் ஹாரன் ஒலிப்பது.
 
30. நடத்துனர் சீருடை அணியாமல் இருப்பது.
 
31. டிரைவர் சீருடை அணியாமல் இருப்பது.
 
32. நடத்துனர் ‘பேட்ஜ்’ அணியாமல் இருப்பது.
 
33. சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.
 
34. பயணிகள் வாகனத்தில் சரக்குகளை ஏற்றி செல்வது.
 
35. வாகனங்களில் அமர்ந்து புகை பிடிப்பது.
 
36. வாகனங்களில் வண்ண விளக்குகளை பயன்படுத்துவது.
 
37. வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது.
 
38. தவறான முறையில் முன்புறம் செல்லும் வாகனத்தை முந்துவது.
 
39. மது அருந்தி விட்டு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.
 
40. வாடகைக்கு பயன்படுத்த அனுமதி பெறாமல் வாகனம் ஓட்டுவது.
 
41. ஓடும் வாகனத்தில் டிரைவர் ஏறுவது.
 
42. ஓடும் வாகனத்தில் பயணிகள் ஏறுவது.
 
43. சட்டப் பிரிவு 192 (1) (2) அல்லது அதற்கும் மேற்பட்ட தடவை குற்றம் செய்வது).