Search This Blog

Tuesday, June 28, 2011

மெய்சிலிர்க்க வைத்த முத்துமணி


பிலடெல்பியா நகரம் உலக அரங்கில் கல்விக்கு புகழ்பெற்றது. பிலடெல்பியா பல்கலைக்கழகத்தையும், மருத்துவ கல்வி மையத்தையும் வாசு ரங்கநாதனின் நண்பர் முத்துமணி சுற்றி காண்பித்தார். தமிழ் இணைய மாநாட்டின் அலுவல் பணிகளை செய்த முத்துமணி மருத்துவ ஆராய்ச்சியாளர் என்பதை உணர்ந்தேன். இவர் ஒரு வைராலாஜி ஸ்பெஷலிஸ்ட் எச்ஐவி முதல் டெங்கு காய்ச்சல் வரை பல்வேறு நோய்களின் வைரஸ்களை வளர்த்து வருகிறார். சிக்கன்குனியாவிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளார். ஆராய்ச்சியாளர் முத்துமணியுடன் உலகின் முதல் இருதய பைபாஸ் சர்ஜரி நடந்த அரங்கை சுற்றிப்பார்த்தோம். மருத்துவமனையை சுற்றிப்பார்த்து மெய்சிலிர்த்து போனேன்.

முத்துமணி 2000 ஆம் ஆண்டும் இளம் அறிஞர்களுக்கான நோபல் பரிசு சான்றிதழை பெற்றுள்ளார். முத்துமணியின் மருத்துவ அலுவலகத்தில் பத்து பேர் நோபல் பரிசு பெற்றுள்ளார்களாம். இவரும் விரைவில் நோபலை பெற்று தமிழனின் பெருமையை நிலைநாட்டுவார் என நம்புகிறேன்.

அமெரிக்கா: தமிழ் இணையம்


2002 ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டிற்கு எனக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டது. பல ஆண்டுகள் காத்திருந்தேன். இவ்வாண்டின் தமிழ் இணைய மாநாடு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஜூன் 17 முதல் 19 வரை நடத்தப்பட்டதையொட்டி நியூயார்க் நகரத்திற்கு 16ந் தேதி விரைந்தோம். நியூயார்க் நகரம் வாயிலாக மாநாடு நடக்கும் பிலடெல்பியா நகரை சென்றடைந்தோம். இந்தியாவிலிருந்து டாக்டர் மு.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் 18 போர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டை வாசுரங்கநாதன், கல்யாண சுந்தரம் மற்றும் பெருங்கணிக்கோ கவியரசன் ஆகியோர் சிறப்புடன் நடத்தினர். இதுவரை நடந்த தமிழ் இணைய மாநாடுகளில் சிறந்த மாநாடாக அமெரிக்க மாநாடு நடைபெற்றதாக டாக்டர்.ஆனந்தகிருஷ்ணன் மனம்திறந்து கூறினார். நான்கு நாட்கள் பிலடெல்பியா நகரில் இருந்துவிட்டு வாஷிங்டன் சென்றடைந்தேன்.

Tuesday, June 14, 2011

தமிழும் கணிதமும்: ஆய்வுப்பட்டம்


ஜூன் துவக்கத்தில் தமிழ் மற்றும் கணிதத்தின் ஒற்றுமை குறித்த ஆய்வு படிப்பை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் துவக்கினேன். இச்சீரிய படைப்பு தமிழ் சமுதாயத்திற்கு பயன்படும் என நம்புகிறேன். இவ்வாய்வு ஏன்?

மொழியும், கணிதமும் தான் மனிதன் கற்க வேண்டிய அடிப்படையாகும். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என்பன மொழியாகும். வேதியியல், புவியியல், புள்ளியியல், கணினியியல், தொழில்நுட்பவியல் என பல நுட்பவியல் முறைகளும் பாடங்களாக உள்ளன. இவை யனைத்திற்கும் அடிப்படை கணிதமே ஆகும்.

நம் தமிழ் மொழிக்கு எவ்வாறு சங்கத்தமிழ், செவ்வியல் மொழி என அடையாளம் உள்ளது. அதேபோல் அளவைகள், சூத்திரங்கள், வாய்ப்பாடுகள், கணக்கு வழக்கு முறைகள் அனைத்தும் நம் தமிழ் சமுதாயத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கணிதம் தமிழனின் சமுதாயத்தில் உருவானதா?. கணிதம் நம் தமிழ் மொழியின் வேரா? கணிதத்தின் சங்க இலக்கிய சான்றுகள் மற்றும் தமிழுக்கும், கணிதத்திற்கும் உள்ள ஒற்றுமைச் சான்றுகள் குறித்து இவ்வாய்வில் தேடவுள்ளேன்.

அளவுகள், எண்ணிக்கை, கணக்கிடுதல், ஆகியன என்னென்ன நிலைகளில் உருவெடுத்துள்ளது. பல்வகை கணித பாட முறைகள், கருவிகள், அறிவியல் மற்றும் கணித புள்ளியியல் வழிகள் தமிழில் எவ்வாறு உருவெடுத்தது என்பன இவ்வாய்வில் ஆராயவுள்ளேன். தமிழ் கணித சான்று காண்போர், கண்டோர் உதவவும்.