Search This Blog

Monday, May 28, 2012

அனிமேஷன் படிப்புகள் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் துவக்கம்


 செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி 1923 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியாக தென்தமிழ்நாட்டில் திறக்கப்பட்டது. இக்கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவு, சென்னையில் உள்ள சாஃப்ட்வியூ நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு அனிமேஷன் வகுப்புகளை தனி பிரிவாக நடத்தவுள்ளது.

சாஃப்ட்வியூ நிறுவனத் தலைவர் திரு. மா. ஆண்டோ பீட்டர் அவர்கள் செயின்ட் சேவியர்ஸ்- சாஃப்ட்வியூ அனிமேஷன் கல்வி ஒருங்கிணைப்பாளராவார். செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியின் அனிமேஷன் லேபில் அனிமேஷன், அச்சுப்பணி, இணையதளம் உருவாக்கம், மல்ட்டிமீடியா, ஈலேர்னிங் என்ற இணையவழி கல்வி உருவாக்கம், வீடியோ எடிட்டிங் பற்றிய பல வகையான பட்டய படிப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் தேவைக்கேற்ப பட்டய படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். இந்த பட்டிய படிப்பு மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.





Sunday, May 27, 2012

தமிழ் அறிஞர்கள் நால்வருக்கு பாராட்டு விழா

கணித்தமிழ் சங்கம் தகவல் தொழிற்நுட்பத் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கணித்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கணினி சார்ந்த வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் தயாரிப்பளார்கள் உறுப்பினராக உள்ளனர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் இந்திய மொழிகளுக்காக செய்திடும் தகவல்தொழில்நுட்ப மறுமலர்ச்சிக்கு பல்வேறு வகையான மேம்பாட்டுப்பணிகயையும் கணித்தமிழ்ச்சங்கம் செய்து வருகிறது. தமிழக அரசின் தமிழ்க்கணினி திட்டங்களுக்கு கணித்தமிழ்ச் சங்கம் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றுவது மட்டுமின்றி பல விழிப்புணர்வு பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. இணைய முகவரி: www.kanithamizh.in



கணித்தமிழ்ச்சங்கம் சார்பாக தமிழ்மொழி டாட் காம் துவக்க விழா சென்னை மைலாப்பூரில் லக்சணா அரங்கில் (26.05.2012) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திரா பார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்ணன், மா.ஆண்டோ பீட்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழ் தொண்டாற்றும் நால்வருக்கு கவுரவிப்பு செய்யப்பட்டது. திரு. க.ஜெயகிருஷ்ணன், திரு. வீரமணிபாரதிதாசன், திரு.சி.வெற்றிவேல் மற்றும் திரு. பத்ரிசேஷாத்திரி ஆகியோர் ஆவர்.

தமிழில் முதன் முதலாக வாசகர்களுக்காக கணினி இதழை வெளியிட்ட க.ஜெயகிருஷ்ணனுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அவரின் ‘தமிழ்க்கம்ப்யூட்டர்’ இதழ் 21 ஆண்டுகளாக வெளி வருகிறது. தமிழ் ஊடகப்பேரவை, கணித்தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ் பதிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இவர் உள்ளார்.

சென்ற நூற்றண்டின் தலைசிறந்த தமிழ் அறிஞர் பாரதிதாசனின் பேரன் வீரமணிபாரதிதாசனுக்கு கவுரவம் செய்யப்பட்டது. பாரதிதாசன் நாத்திகவாதி, ஆனால் இவரோ ஆன்மீகவாதி. உலககெங்கும் சென்று இவர் ஆன்மீக தமிழ்ச்சொற்பொழிவை ஆற்றி வருகிறார்.

பள்ளி ஆசிரியர் சி. வெற்றிவேலுக்கு ஒரு வரியில் திருக்குறள் எழுதியமைக்கு கவுரவம் செய்யப்பட்டது. இவர் 150க்கும் மேற்பட்ட திருக்குறள் உரை மற்றும் 5000க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களை சேகரித்து வைத்துள்ளார். தற்போது தன் சொந்த இணையத்தை
 தொகுத்து வருகிறார்.

கிழக்கு பதிப்பகத்தின் நிர்வாகி பத்ரிசேஷாத்திரிக்கு கவுரவம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றிய இவர் அறிவியல், இலக்கியம், ஆன்மீகம், நாவல், பயோகிராபி, மருத்துவம், இசை, கலை மற்றும் எண்ணெற்ற தலைப்புகளில் நூல்கள் பதித்துள்ளார். இவருடைய என்.எச்.எம் ரைட்டர் என்ற தமிழ்மென்பொருள் பெரும் பயன்பாட்டில் உள்ளது.



Tuesday, May 22, 2012

ராஜீவ்காந்தி கொலைகுற்றவாளி பேரறிவாளன் சிறை குற்றவாளிகளில் +2 தேர்வில் முதலிடம்


சிறைகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 35 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தாண்டும் 100 சதவீதம் தேர்ச்சியை சிறைத்துறை தக்க வைத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் 1,096 மதிப்பெண்கள் பெற்று சிறை மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்தார்.

தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளில் புழல் மத்திய சிறையில் 9 பேர், வேலூர் மத்திய சிறையில் 8 பேர், மதுரை மத்திய சிறையில் 10 பேர், கோவை சிறையில் 8 பேர் உள்பட 35 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்கள் தேர்வு எழுத புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. பேரறிவாளனும், முருகனும் தூக்குத் தண்டனை கைதியாக இருப்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இவர்களுக்காக வேலூர் மத்திய சிறையில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

சிறையில் தேர்வு எழுதிய அனைவரும் வணிகப் பிரிவே படித்து வந்தனர். முதல் 3 இடங்கள்: இவர்களில், பேரறிவாளன் 1,096 மதிப்பெண்கள் பெற்று சிறை மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பேரறிவாளன் பெற்று மதிப்பெண்கள் பாடவாரியாக: (தமிழ்- 185, ஆங்கிலம்-169, வரலாறு-183, பொருளாதாரம்-182, வணிகவியல்-198, கணக்கு பதிவியல்-179.)

இவருக்கு அடுத்தப்படியாக மதுரை மத்திய சிறைக் கைதி சௌந்திரப்பாண்டியன் 1,080 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார். மூன்றாமிடத்தை புழல் மத்தியசிறைக் கைதி முனுசாமி (988) பிடித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு ஏ.டி.ஜி.பி. டோக்ரா வாழ்த்து தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் மற்றொரு தூக்குத் தண்டனைக் கைதியான முருகனும் தேர்ச்சி பெற்றுள்ளார். (அவர் தமிழ்-173, ஆங்கிலம்-165, வரலாறு-138, பொருளாதாரம்-150, வணிகவியல்-200, கணக்கு பதவியியல்-157 என மொத்தம் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.) இதுவரையில் சிறைக் கைதிகள் யாரும் பெறாத மதிப்பெண்ணை பேரறிவாளன் பெற்றுள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Sunday, May 20, 2012

நாட்டுப்புறக்கலை படைப்பாளி

தென்தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி ஆகும். தமிழகத்தில் நாட்டுப்புறக்கலைகளை நடத்தும் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. நாட்டுப்புறக்கலைகளுக்கென்று தனித்துறையே அக்கல்லூரியில் உள்ளது. அக்கல்லூரியில் நாட்டுப்புறக்கலைகள் மற்றும் காட்சி ஊடகவியலின் பொறுப்பாளராக அருட்தந்தை சேவியர்அந்தோணி பணியாற்றி வருகிறார். அவர் பல்வேறு தமிழ் தொகுப்புகளையும், சிறுகதை தொகுப்புகளையும் படைத்துள்ளார். அவரைப்பற்றி இன்றைய தினமணி கட்டுரை (20.5.2012 தினமணி கொண்டாட்டம்) படைத்திருந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்களுக்காக அக்கட்டுரையை இங்கு தொகுத்துள்ளேன்.

மின்னஞ்சல்: xaviantony@yahoo.co.in 




Thursday, May 17, 2012

வேர்கள் மாணவர்கள் இதழ்

சாப்ப்ட்வியூ மீடியா காலேஜ் மாணவர்கள் வெளியிடும் மாணவர்கள் இதழை படியுங்கள். மே மாத இதழில் வெளியாகியுள்ள தலைப்புகள்:









·    மீன்பாடி வண்டி ஒட்டும் அப்பாவுக்கு மினி லாரி வாங்கிக் கொடுத்த உலக சாம்பியன்!


·        கவிதைப் பூங்கா - கருவறை






·        சாஃப்ட்வியூ மாணவர்களின் வியூ பாயின்ட்

 ·  ஊடகத்துறைக்கு பாலமாக  செயல்படும் சாஃப்ட்வியூ இயக்குநர் சித்தார்த் பேட்டி


Wednesday, May 16, 2012

ரோபோ இயங்கும் விதம்

தினத்தந்தி கோகுலம் கதிரில் ரோபோ இயங்கும் விதம் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரையை படித்து கருத்துக்களை பதிக்கவும்.






Friday, May 11, 2012

சமச்சீர் பாடப்புத்தகங்கள் இலவசமாக ஆப்பிள் ஐ-பேடில் பெறலாம்


விஷ்வக் சொல்யூஷன்ஸ் நிறுவனம்:

விஷ்வக் சொல்யூஷன்ஸ் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டு, இன்று 9 நாடுகளில் தனது கிளைகளை கொண்டுள்ளது. இந்தியாவில் இந்நிறுவன கிளைகள் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ளது. இணையம் மற்றும் செல்பேசி தொழில்நுட்பத்தில்  நிபுநரான திரு.வெங்கட்ரங்கன் திருமலையின் தலைமையில் இந்நிறுவனம் க்ளவுட்  (Cloud) சொல்யூஷன்ஸ், மைக்ரோசாஃப்ட் ஷேர்பாயின்ட் மற்றும் என்டர்பிரைஸ் மொபிலிட்டி ஆகியவற்றில் நிறைய வளர்ச்சிகளை செய்துள்ளது. இந்நிறுவனச் சேவையை பாராட்டி பல்வேறு நாடுகள் பல விருதுகளையும் அளித்துள்ளது.

செல்பேசி சேவைகள்:

விஷ்வக்கின் செல்பேசி தொழில்நுட்பமானது மிக பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனம் ஐபோன், ப்ளாக்பெர்ரி, ஆன்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் செல்பேசிகளுக்கு நிறைய மென்பொருட்களை தயாரித்துள்ளது. மேலும் செல்பேசியில் உள்ள தகவல்களை கணிப்பொறி மற்றும் தொலைக் காட்சியிலும் பார்ப்பதற்கு உண்டான மென்பொருளையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றில் குறிப்பிடக்கூடிய மென்பொருளான யூ.ஆர்.எல். செக்கர் என்பது ஒரு இணைய முகவரி வேலை செய்கிறதா இல்லையா என்பதை பயனீட்டாளருக்கு தெரிவித்து விடும்.  ஸோரோகேவ் எனும் மென்பொருள் விண்டோஸ் செல்பேசிக்கும், ஃபைன்ட் மிஸ்ஸிங் லெட்டர்ஸ் என்ற மென்பொருள் ஐபோன், ஆன்ட்ராய்ட், ப்ளாக்பெர்ரி செல்பேசிகளுக்கும் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்கும் மென்பொருளாகும்.


சமச்சீர் கல்வி புத்தகங்கள்:

இவர்கள் சமீபத்தில் “Tamilnadu Tx” என்ற மென்பொருளை தயாரித்துள்ளனர். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சமச்சீர் கல்வியின் பாட புத்தகங்கள் அனைத்தும் 1 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அனைத்தும் இந்த மென்பொருளில் அடங்கியிருக்கும். இதனை ஆப்பிள்                   ஐ-பேடில் இலவசமாக படித்துக் கொள்ளலாம். http://itunes.apple.com/ app/tamilnadu_tx/id509199835?mt=8 மற்றும் http://vspl.in/TNTXB  மற்றும் http://www.vishwak.com என்ற இணைய தளத்தில் படிக்கவோ, பதிவிறக்கமோ செய்து கொள்ளலாம். அதாவது மாணவர்கள் தங்கள் எடைக்கு சமமாக பாடப்புத்தகங்களை எடுத்துச் செல்லும் காலம் மறைந்து ஒரே ஒரு ஐபேட்டை எடுத்துக் கொண்டு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். மேலும் இந்த பாடப் புத்தகங்கள் எவ்வளவு முறை படித்தாலும் முதலில் படித்தது எப்படி இருந்ததோ அதே போலவே இருக்கும். ஆனால் பாடத்தை புத்தகத்தின் வாயிலாக படித்தாலோ சீக்கிரமாக கிழிய வாய்ப்புள்ளது. இவை இந்த ஐபேடில் சாத்தியமில்லை.
இந்த மென்பொருளில் கூடிய விரைவில் புக்மார்க்கிங் மற்றும் நோட்டேக்கிங் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெறும் என விஷ்வக் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். முக்கிய பகுதிகளை குறித்து வைக்க புக்மார்க்கிங் பயன் படும். வேண்டிய குறிப்புகளை எழுதிக்கொள்ள நோட்டேக்கிங் பயன்படும். இதன் மூலம் மாணவர்கள் எளிய முறையில் பாடங்களை படிக்க முடியும். இப்பாடப் புத்தகத்தில் ஏற்படும் மாற்றங்களை இம்மென்பொருளிலும் மாற்றி விடுவோம்  என விஷ்வக் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இம்மென் பொருளை ஐட்யூன் தளத்தில் இலவசமாக நாம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். http://vspl.in/TNTXB


Thursday, May 10, 2012

மீடியா துறையில் 100% வேலைவாய்ப்பு பெற வேண்டுமா?


விசுவல் கம்யூனிகேஷன் படிக்கலாம்

பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வில் வெற்றி பெற்று, மீடியாத் துறையில்  வேலைவாய்ப்பை பெற  துடிக்கும்  மாணவச் செல்வங்களுக்கு வழிகாட்ட சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் ஓராண்டு விசுவல் கம்யூனிகேஷன் டிப்ளமோ பயிற்சியை நடத்துகிறது.

மீடியாத் துறையில் நுழையத் துடிக்கும் மாணவ, மாணவியருக்கு டிசைனிங், ஸ்கிரிப்ட் ரைட்டிங், ஜர்னலிசம், வீடியோகிராஃபி, அனிமேஷன், அட்வர்டைசிங், ஃபிலிம் மேக்கிங், டைரக்ஷன், அவிட் மற்றும் வீடியோ எடிட்டிங், கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பாடத் திட்டங்களை உள்ளடக்கிய ஓராண்டு விசுவல் கம்யூனிகேஷன் பயிற்சியை சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் அளித்து வருகிறது. இப்பயிற்சியில் சேரும் அனைவருக்கும் இலவச லேட்டஸ்ட் தொழில்நுட்ப சிறப்பம்சமுடைய லேப்-டாப் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மீடியா துறையின் சிறந்த கல்விமுறைக்கான ஐஎஸ்ஓ. தரச்சான்றிதழையும் பெற்றுள்ளது. இந்நிறுவனம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிங்கின் பதிவு பெற்ற நிறுவனமாகும். மேலும் பதிவு பெற்ற பத்திரிகையும் மாணவர்களுக்காக இந்நிறுவனம் நடத்துகிறது. இன்டர்நெட் உலகில் தடம்பதிக்க மாணவர்களுக்காக தமிழ்சினிமா டாட் காம் என்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறது.

மாணவர்களுக்கு வீடியோ மற்றும் சினிமா துறையை சார்ந்த அறிவை அளித்திட, அவை  தொடர்பான வகுப்புகள் முழுக்க, முழுக்க வீடியோ ஸ்டுடியோவிலேயே நடத்தப்படுகிறது. சின்னத்திரை மற்றும் சினிமா துறையை சார்ந்த பிரபலமானவர்கள் சிறப்பு ஆசிரியர்களாக சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். இதுவரை இயக்குநர் பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், சாமி, சிம்புதேவன், வ.கௌதம், மு.களஞ்சியம், ஜே.எஸ்.நந்தினி, உதயன், ராஜசேகர் ஆகிய இயக்குநர்களும், நடிகை ரோகிணி, ரேவதிசங்கரன், பிரியா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். இது தவிர டாக்டர். மு.அனந்தகிருஷ்ணன், ஓவியர் ஜெயராஜ், நக்கீரன் கோபால், மதன்கார்க்கி, யுகபாரதி, மாலன், லேனா தமிழ்வாணன் மற்றும் எண்ணற்ற பிரபலங்கள் சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மாணவர்களுக்கான படைப்பாற்றல் வகுப்புகளை நடத்தியுள்ளனர். மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் விதத்தில் புகைப்படக் கண்காட்சி, கருத்துக்கணிப்பு, குறும்படத் தயாரிப்பு ஆகியவற்றில் மாணவர்களை பங்கேற்கவும் சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் முனைப்புடன் பணியாற்றுகிறது. எங்களுடைய மாணவர்கள்  தயாரித்த               குறும்படங்களை இதுவரை நமீதா, சிம்ரன், அஞ்சலி, பூமிகா, ஸ்ரீகாந்த், பரத், சுதாரகுநாதன், பிரியாமணி மற்றும் பிரபலங்கள் வெளியிட்டுள்ளார்கள். 

மாணவர்கள் ஓராண்டு விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போது நேரடியாக பிரபல தொலைக் காட்சி சேனல்களில் சிறப்பு பயிற்சியை (Internship Training) பெற்றிட எங்கள் நிறுவனம்  ஏற்பாடு செய்கிறது. இதன் மூலமாக படிக்கும் போதே சினிமா மற்றும் ஒளி - ஒலிப்பரப்பு துறை சம்மந்தமான அனைத்து அறிவையும் மாணவர்கள் பெற்றிடலாம். இது தவிர்த்து பிரபல நாளிதழ் களிலும் சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மாணவர்களுக்கான அனிமேஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பயிற்சி 100% செய்முறை பயிற்சியாகவே கற்றுத் தரப்படுகிறது. இதற்கு தியரி வகுப்புகளே கிடையாது. மேலும் மாணவர்கள் பயிற்சி முடியும் தருவாயில் ஒட்டுமொத்தமாக ஒரு டாக்குமென்ட்ரி படமோ அல்லது குறும்படமோ தயாரிக்க எங்கள் நிறுவனமே ஏற்பாடு செய்கிறது. இதன் மூலம் திரைப்பட தயாரிப்பு அறிவை மாணவர்கள் படிக்கும் போதே பெற்றுக் கொள்கிறார்கள். இதற்கான தயாரிப்பு செலவு அனைத்தையும் எங்கள் நிறுவனமே ஏற்றுக் கொள்கிறது.

பெரும்பான்மையானமாணவர்களுக்கு எம்என்சி, எஃப்.எம். ரேடியோ, அனிமேஷன், சினிமா மற்றும் டி.வி துறையில் நுழையவேண்டும் என்ற கனவு இருக்கிறது, மேலும் சினிமா துறை, சின்னத்திரை, சேட்டிலைட் சேனல்கள் ஆகியவற்றில் நுழையபெரும்பான்மையோருக்கு பல ஆண்டுகள் பிடித்து விடுகிறது. இக்குறையை போக்கும் வண்ணம்சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் நிறுவனம் அனைவருக்கும் சில மாதங்களில்  வேலைவாய்ப்பைபெற்று தருவதில் ஆணித்தரமாக உள்ளது. சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் மாணவர்கள் அனைத்துதிரைப்பட நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், எம்என்சி மையங்கள் மற்றும் ஆன்லைன் அமைப்புகளிலும் நல்ல ஊதியத்தில்பணிபுரிந்து வருகின்றனர். மாணவர்களுக்கு பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பைபெற்றுத் தருவதையே முக்கிய லட்சியமாக சாஃப்ட்வியூமீடியா காலேஜ் நிறுவனம் கொண்டுள்ளது. பள்ளிப்படிப்பில் தோல்வியுற்றமாணவர்களுக்கும், இத்துறையில் வேலைவாய்ப்பு பெறவும்,கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்கவும்மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது. சிறந்த வேலைவாய்ப்பை பெற்ற மாணவர்கள் பட்டியலைஎங்கள் இணையதளத்தில் பார்க்கலாம். ஓராண்டு பயிற்சிக்கான கட்டணம் ரூ.1,50,000/=ஆகும். இப்பயிற்சியின் நடுவே பிற கூடுதல்கட்டணமோ, திரைப்படத் தயாரிப்பிற்கான கட்டணமோ,லேப்டாப் கட்டணமோ, சான்றிதழ் கட்டணமோ, தேர்வுக் கட்டணமோ மற்றும் எவ்விதமறைமுக கட்டணமோ ஓராண்டு முழுவதும் வசூலிக்கப் படுவதில்லை. இணையம்: http://softview.in/courses_visual.php?current=courses

இப்பயிற்சியில் சேரும் மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்க ஸ்போக்கன் இங்கிலீஷ், பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் மற்றும் ஓவிய பயிற்சி மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகின்றன. வெளியூர் மாணவ, மாணவிகளுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பிட்ட மாணவர் எண்ணிக்கையிலேயே ஆண்டுதோறும் சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் நிறுவனத்தின் அட்மிஷன் நடைபெறுகிறது. இன்றே இப்பயிற்சியில் சேர உங்கள் அட்மிஷனுக்கு முன்பதிவு செய்யவும். தொடர்புக்கு: சாஃப்ட்வியூ மீடியா காலேஜ், 117, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-29. தொலைபேசி : 044-42113535, 9940084476  


Wednesday, May 2, 2012

சுஜாதா விருதுகள்

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு பின் ஆண்டுதோறும் "சுஜாதா விருதுகள்" அளிக்கப்படுகின்றன. கவிதை, நாவல், இணையம், உரைநடை, சிற்றிதழ்களுக்கு சிறந்த படைப்பாற்றல் விருதுகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாண்டின் விருதுகள் 3.5.2012 அன்று கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் அளிக்கப்படுகிறது.