Search This Blog

Sunday, May 27, 2012

தமிழ் அறிஞர்கள் நால்வருக்கு பாராட்டு விழா

கணித்தமிழ் சங்கம் தகவல் தொழிற்நுட்பத் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கணித்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கணினி சார்ந்த வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் தயாரிப்பளார்கள் உறுப்பினராக உள்ளனர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் இந்திய மொழிகளுக்காக செய்திடும் தகவல்தொழில்நுட்ப மறுமலர்ச்சிக்கு பல்வேறு வகையான மேம்பாட்டுப்பணிகயையும் கணித்தமிழ்ச்சங்கம் செய்து வருகிறது. தமிழக அரசின் தமிழ்க்கணினி திட்டங்களுக்கு கணித்தமிழ்ச் சங்கம் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றுவது மட்டுமின்றி பல விழிப்புணர்வு பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. இணைய முகவரி: www.kanithamizh.in



கணித்தமிழ்ச்சங்கம் சார்பாக தமிழ்மொழி டாட் காம் துவக்க விழா சென்னை மைலாப்பூரில் லக்சணா அரங்கில் (26.05.2012) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திரா பார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்ணன், மா.ஆண்டோ பீட்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழ் தொண்டாற்றும் நால்வருக்கு கவுரவிப்பு செய்யப்பட்டது. திரு. க.ஜெயகிருஷ்ணன், திரு. வீரமணிபாரதிதாசன், திரு.சி.வெற்றிவேல் மற்றும் திரு. பத்ரிசேஷாத்திரி ஆகியோர் ஆவர்.

தமிழில் முதன் முதலாக வாசகர்களுக்காக கணினி இதழை வெளியிட்ட க.ஜெயகிருஷ்ணனுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அவரின் ‘தமிழ்க்கம்ப்யூட்டர்’ இதழ் 21 ஆண்டுகளாக வெளி வருகிறது. தமிழ் ஊடகப்பேரவை, கணித்தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ் பதிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இவர் உள்ளார்.

சென்ற நூற்றண்டின் தலைசிறந்த தமிழ் அறிஞர் பாரதிதாசனின் பேரன் வீரமணிபாரதிதாசனுக்கு கவுரவம் செய்யப்பட்டது. பாரதிதாசன் நாத்திகவாதி, ஆனால் இவரோ ஆன்மீகவாதி. உலககெங்கும் சென்று இவர் ஆன்மீக தமிழ்ச்சொற்பொழிவை ஆற்றி வருகிறார்.

பள்ளி ஆசிரியர் சி. வெற்றிவேலுக்கு ஒரு வரியில் திருக்குறள் எழுதியமைக்கு கவுரவம் செய்யப்பட்டது. இவர் 150க்கும் மேற்பட்ட திருக்குறள் உரை மற்றும் 5000க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களை சேகரித்து வைத்துள்ளார். தற்போது தன் சொந்த இணையத்தை
 தொகுத்து வருகிறார்.

கிழக்கு பதிப்பகத்தின் நிர்வாகி பத்ரிசேஷாத்திரிக்கு கவுரவம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றிய இவர் அறிவியல், இலக்கியம், ஆன்மீகம், நாவல், பயோகிராபி, மருத்துவம், இசை, கலை மற்றும் எண்ணெற்ற தலைப்புகளில் நூல்கள் பதித்துள்ளார். இவருடைய என்.எச்.எம் ரைட்டர் என்ற தமிழ்மென்பொருள் பெரும் பயன்பாட்டில் உள்ளது.



No comments:

Post a Comment