Search This Blog

Tuesday, May 22, 2012

ராஜீவ்காந்தி கொலைகுற்றவாளி பேரறிவாளன் சிறை குற்றவாளிகளில் +2 தேர்வில் முதலிடம்


சிறைகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 35 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தாண்டும் 100 சதவீதம் தேர்ச்சியை சிறைத்துறை தக்க வைத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் 1,096 மதிப்பெண்கள் பெற்று சிறை மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்தார்.

தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளில் புழல் மத்திய சிறையில் 9 பேர், வேலூர் மத்திய சிறையில் 8 பேர், மதுரை மத்திய சிறையில் 10 பேர், கோவை சிறையில் 8 பேர் உள்பட 35 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்கள் தேர்வு எழுத புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. பேரறிவாளனும், முருகனும் தூக்குத் தண்டனை கைதியாக இருப்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இவர்களுக்காக வேலூர் மத்திய சிறையில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

சிறையில் தேர்வு எழுதிய அனைவரும் வணிகப் பிரிவே படித்து வந்தனர். முதல் 3 இடங்கள்: இவர்களில், பேரறிவாளன் 1,096 மதிப்பெண்கள் பெற்று சிறை மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பேரறிவாளன் பெற்று மதிப்பெண்கள் பாடவாரியாக: (தமிழ்- 185, ஆங்கிலம்-169, வரலாறு-183, பொருளாதாரம்-182, வணிகவியல்-198, கணக்கு பதிவியல்-179.)

இவருக்கு அடுத்தப்படியாக மதுரை மத்திய சிறைக் கைதி சௌந்திரப்பாண்டியன் 1,080 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார். மூன்றாமிடத்தை புழல் மத்தியசிறைக் கைதி முனுசாமி (988) பிடித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு ஏ.டி.ஜி.பி. டோக்ரா வாழ்த்து தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் மற்றொரு தூக்குத் தண்டனைக் கைதியான முருகனும் தேர்ச்சி பெற்றுள்ளார். (அவர் தமிழ்-173, ஆங்கிலம்-165, வரலாறு-138, பொருளாதாரம்-150, வணிகவியல்-200, கணக்கு பதவியியல்-157 என மொத்தம் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.) இதுவரையில் சிறைக் கைதிகள் யாரும் பெறாத மதிப்பெண்ணை பேரறிவாளன் பெற்றுள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


1 comment:

  1. இவர்களை போன்றவர்கள் மனவலிமை விடாமுயற்ச்சியை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.

    ReplyDelete