Search This Blog

Wednesday, November 2, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாகிறது


திமுக தங்கம் தென்னரசுவின் மேற்பார்வையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசிய அளவில் பிரம்மாண்டமாக உருவானது. தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையான செய்தி பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமைனையாகியதை குறித்து இணையத்தில் பார்வையிடும் கருத்தை (நல்லதோ/கெட்டதோ) தொகுத்து வருகிறேன்.
-------------------------------------
தி.மு.க அரசால் சென்னையில் கட்டப்பட்டுள்ள பாலங்களை எல்லாம் சிறுவர்கள் ஸ்கேட்டிங் மைதானமாக மாற்றி விடலாம் (Kavi.Senkuttuvan)
-------------------------------------------------------------------------------------
தன்மானமுள்ள தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்’ வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை (Dr.M.Karunanidhi)
-------------------------------------------------------------------------------------
ஆசியாவிலேயே பெரிய நூலகம் என்கிறீர்களே, எதை வைத்துக் கூறுகிறீர்கள்? அங்குள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை வைத்தா அல்லது நிலப்பரப்பை வைத்தா? அந்நூலகத்திற்கு ஒழுங்கான ஒரு வலைத்தளம் கூட இல்லையே! பிலோக்ஸ்போர்டில் வலைத்தளம் என்ற பெயரில் எதையோ செய்து வைத்திருக்கின்றனர். தளமும் தமிழில்லை. ஹில்லரி தமிழில் 'வணக்கம்' கூறினார் என்ற செய்தித் துணுக்கை மட்டும் படமாக இணைத்துள்ளனர். காண்க: http://annacentenarylibrary.blogspot.com (Elanjelian Venugopal)
-------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவுக்கு பகை கருணாநிதி மீதா? தமிழ் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதுமா ? பாடபுத்தகங்களில் செம்மொழி மீதெல்லாம் கருப்பு சாயம் பூசி அழித்தார். ’யாதும் ஊரே யாவரும் கேளிர் ’பாடலை மறைத்தார் அது வர்ணாஸ்ரத்திற்கு எதிரான குரல் என்பதால்.சமச்சீர் கல்விக்கு எதிராக கொக்கரித்தார்.செம்மொழி நூலகத்தை குப்பைத் தொட்டியில் வீசினார்.தலைமைச் செயலகத்தை அடாவடியாக மருத்துவமனையாக மாற்றுவேன் என்கிறார். இப்போது அண்ணா நூலகத்தை பிய்த்து எறிகிறார் (S.P.Agasthiyalingam)
-------------------------------------------------------------------------------------
நல்லவேளை நூலகத்தை பெருமாள் கோயிலாக மாற்றாமல் விட்டாரே புரட்சித்தலைவி அதற்காக மகிழ்வோம் (YuvaKrishna)
-------------------------------------------------------------------------------------
முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை. (Venkatesan, Writters Association)
-------------------------------------------------------------------------------------
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு எல்லாம் மீண்டும் அதன் அதன் இடத்துக்கு வந்துவிடும். எல்லாம் நம் செலவில்தான்.(Sridharan)
-------------------------------------------------------------------------------------
முதன் முதலாக சென்னையில் குழந்தைகளுக்கான சூப்பர் ஸ்பெஸஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்கப்படுகிறது. இதை தாய்மார்கள் வரவேற்கிறார்கள். நானும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் (Aruna, Chennai Race Club)
-------------------------------------------------------------------------------------
முந்தைய திமுக அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில், அதிமுக அரசு நடந்து கொள்கிறது. நூலகத்திற்காக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பை எவ்வாறு மருத்துவமனையாக பயன்படுத்துவார்கள் (வைகோ மதிமுக)
-------------------------------------------------------------------------------------
அரசுக்கு மக்களின் நூலகப் பயன்பாட்டில் உண்மையில் அக்கறையிருந்தால்,அந்தப் பணத்தை நியாயமாகச் செலவிடவேண்டுமென்றால், தமிழகம் முழுவதும் பல ஊராட்சிகளிலும் பஞ்சாயத்துக்களிலும் பேணுவாறின்றி அலட்சியப்படுத்தப் பட்டுக் கிடக்கும் நூற்றுக்கணக்கான நூலகத்துறை நூலகங்களை மேற்பார்வையிட்டு மேம்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள மக்களின் படிப்பு ஆர்வத்திற்கு உதவி புரியலாம். இல்லையென்றால்
இது டம்பச் செலவே.(ஜி.ஸன்தானம்)
-------------------------------------------------------------------------------------
மருத்துவமனை கட்ட சென்னையில் இடங்களா அரசுக்கு இல்லை? நூலகத்திற்கென வடிவமைக்கப்பட்டதை மருத்துவமனையாக மாற்றுவதற்கு மக்கள் வரிப்பணம் பலகோடி ரூபாய் செலவாகத்தானே செய்யும்? அது எவ்வகையில் ஏற்கக்கூடிய ஒன்று? (வீரமணி)
-------------------------------------------------------------------------------------
சமச்சீர் கல்வியில் கண்ட தோல்வியைத்தான் நூலக விஷயத்திலும் அரசு சந்திக்கும்: (மேலாண்மை பொன்னுச்சாமி)
-------------------------------------------------------------------------------------
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது: இடமாற்றம் செய்யக்கூடாது (ராமதாஸ்,பாமக)
-------------------------------------------------------------------------------------
காழ்ப்பு அரசியல் அணுகுமுறைக்கு மாறாக ஆக்கப்பூர்வமான அரசியல் அணுகுமுறையை, ஜனநாயக நடைமுறையை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் அரசின் முடிவை கைவிட்டு, தற்போது உள்ள இடத்திலேயே நூலகம் தொடர்ந்து இயங்குவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும் (ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )
-------------------------------------------------------------------------------------
கன்னிமாரா நூலகம், மவுண்ட்ரோடு தேவநேயப்பாவணர் நூலகங்கள் கிடக்கும் நிலையில் 500 கோடிக்கு இன்னோர் நூலகம் என்பதையாரும் கேட்கவில்லை. மேற்சொன்ன இரண்டு நூலகங்களில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா நூலகங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி கிடையாது. அதே பணி புரியும் பெண்கள் நிலையோ பரிதாபம். ஆனால் 500 கோடிக்கு அதுவும் முன்பு இதே இடத்தை சட்டசபை ஆக்க கால்கோள் நடந்த இடத்தில் நூலகம் கட்டிய முன்னாள் முதல்வர் நல்லவர். இன்னாள் முதல்வர் கெட்டவர் (ராஜசங்கர்)
-------------------------------------------------------------------------------------
இந்த இடம் மாற்றம் நடந்தால் ஒரு முதல் தரமான நூலகத்தை இழப்போம் ஒரு மூன்றாம் தரமான மருத்துவமனையை பெறுவோம் Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
ஆப்பு அடிச்சுட்டு ஆப்படிச்சவரும் ஆறு மாசங் கழிச்சு மார்க் போடறேன்ன வரும் ஆசுபத்ரில கக்கூஸ் கழுவ ஒத்துகிட்டாங்களா? Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
அப்டியே மெரீனாவயும் வாய்க்கா மேடா அறிவிச்சு எல்லாரையும் காலைல அங்கயே கக்கா போகச் சொல்லிட்டா சோலி ஓவர் Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
குயின் மேரீஸ் காலேசுக் காரன் இப்பவே நெஞ்சப் புடிச்சுகிட்டு இருப்பான். அடுத்து ஒங்கிட்ட தான் வருதாம் ராசா Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
ஆங்.. அம்மா கேப்புடன் ஒரு காலேசு வச்சுருக்காரு உட்ராதிங்க அடுத்து காலேச கல் குவாரியா மாத்திரலாம் பசங்க கல் ஒடைக்கட்டும். #StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
புத்தகங்களின் மேல் அப்படி என்ன வெறுப்பு.. ? வாயசைக்கும் கூட்டம் உடனிருப்பதால் வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போனதோ? Twitter#StopJJSaveT
-------------------------------------------------------------------------------------
பெங்களூரு நீதிபதி அய்யா, இந்த அங்கவை இங்கவை அம்மையார கொஞ்ச நாள் ஜெயில்ல குந்தவைங்க. Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
நடிப்பு மட்டுமே தெரிந்தவருக்கு படிப்பு பற்றி தெரிய போவதில்லை. Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
இந்த நாலர வருஷம் முடியற வர தமிழர்களுக்கு ஏழரதான். Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
ஆமாம் சாமி போடும் "மங்குனி" அமைச்சர்கள் உதவியுடன், ஆட்டம் போடும் இம்சை "அரசி" 24 ம் புலிகேசி! Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
நம்பிக்கை ஒளி தமிழனுக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் இருந்து வந்தால் தான் உண்டு
Twitter#stopJJsaveTN
-------------------------------------------------------------------------------------
நெப்போலியன் கூட படையெடுக்கும் நாட்டில் உள்ள நூலகங்களை அழிப்பதில்லை என்ற கொள்கை கொண்டவனாம்! #நீங்க எங்கயோ போயிட்டீங்க Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
கண்ணா லட்டு தின்ன ஆசையா? கனிமொழி விடுதலை. கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா? நூலகம்->மருத்துவமனை Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
வீட்டுக்கு ஒரு நூலகம்-அண்ணா
அண்ணா பெயரில் நூலகமே கூடாது‍-அம்மா Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
108 ஆம்புலன்ஸ் 109 ஆம்புலன்ஸாக மாற்றம், 109வது வாய்தா நிணைவாக Twitter#StopJJsaveTN
-------------------------------------------------------------------------------------
சமத்துவ புர‌ங்கள் இனி சத்துணவு கூடமாகுமா? Twitter#StopJJSaveTN
-------------------------------------------------------------------------------------
புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் போல இந்த நூலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எந்த குற்றச்சாட்டும் எழவில்லை. அண்ணாவின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே அவரது பெயரில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைந்திருப்பது பொருத்தமானது (Vijayakanth, DMDK)
-------------------------------------------------------------------------------------
மாநில அரசு என்பது முதலமைச்சர் என்ற தனிமனிதனின் ஆளுமையில்தான் நடக்கிறது என்பது உண்மை (S.Krishnamurthy)
-------------------------------------------------------------------------------------
கொள்கை அடிப்படையில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களுக்கு உள்ளர்த்தம் கற்பிப்பது தேவையில்லாதது. இந்த மாற்றம் என்பது நாளைக்கே நடக்கப்போவதில்லை. டி.பி.ஐ வளாகத்தில் அறிவுப்பூங்கா வளாகம் கட்டப்பட்டனபின்னரே மாற்றப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இப்போது நூலகம் இயங்கத் தடையேதும் இல்லை. ஒராண்டுக்குமேலாக அது முழுவீச்சில் இயங்குவதாகத் தெரியவில்லை (Prof.Nagarajan)
-------------------------------------------------------------------------------------
அண்ணா நூலகத்தை இடமாற்றுவது அறிவு வளர்ச்சிக்கு எதிரான தமிழக முதல்வரின் மன நிலையைக் காட்டுகிறது (பெ.மணியரசன்)
-------------------------------------------------------------------------------------
8 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் கூடிய அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அதே இடத்தில் தொடர வேண்டும் (பிரின்ஸ் கஜேந்திர பாபு)
-------------------------------------------------------------------------------------

3 comments:

  1. பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

    ReplyDelete
  2. அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


    //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////

    .

    ReplyDelete
  3. நூலகம் மாற்றப்படுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள கூடாது...!!!(dassdft)...
    இதையும் சேர்த்துக்கங்க சார்...

    ReplyDelete