Search This Blog

Tuesday, September 13, 2011

மாலைமலர் லேப்டாப் சிறப்பு மலர் - 13th SEPT



தமிழக அரசு வரும் 15ந்தேதி முதல் சுமார் 9,75,000 லேப்டாப்களை தவணை முறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கவுள்ளது. இதைப்போற்றும் வகையில் தினந்தந்தி நாளிதழ் குழுமத்திலிருந்து வெளியாகும், மாலைமலர் நாளிதழ் லேப்டாப் சிறப்பு மலரை பிரசுரித்து இலவச இணைப்பாக அளித்துள்ளது. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் நாளிதழ் வாங்குவோருக்கு இந்த இலவச இதழ் பயனுள்ளதாக இருக்கும். இந்த இலவச மலரை 25 நாட்கள் நான் தொகுத்து அளித்து முடித்துக்கொடுத்தேன். இன்று பிரசுரமாகி கையில் கிடைத்தவுடன் தான், எனக்கே ஆச்சரியம். இவ்வளவு வேலை பளுவுக்கு இடையே நான் எப்படி படைத்தேன் என்று...? கல்விக்கண்ணை திறந்தவர் காமராஜர் என்பர், அது போல தகவல் தொழில்நுட்ப அறிவை கிராமந்தோறும் இவ்வரசு செய்ததேன வரலாறு சொல்லும். லேப்டாப், பாதுகாப்பு, இணையம், ஈமெயில், வைரஸ், அரசு இணைய முகவரிகள், வீடியோ கன்பரன்சிங், இணைய சேவைகள் மற்றும் பயன்கள், தமிழ் மென்பொருட்கள் என பல அத்தியாயங்கள் இம்மலரை அலங்கரித்துள்ளன. இலவசமாக அளித்தாலும் இம்மலர் அழகிய லேஅவுட்டு மற்றும் உயர்தர காகிதம் ஆகிய மதிப்புடன் திகழ்கிறது. ஒவ்வொரு கணினி அடிப்படை வேண்டுவோருக்கும் இம்மலர் அறிவு மலராக இருக்கும். இன்றைய மாலைமலரின் விலை.ரூ.4/= மட்டுமே.

4 comments:

  1. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

    http://kuwaittamils.blogspot.com/2011/09/aircel-customer-care.html

    ReplyDelete
  2. சிறந்தபணி , பாராட்டுகள்
    சுகுமாரன்

    ReplyDelete
  3. உயரிய பணி.சிறப்பான தகவல்கள்.வளர்க உங்கள் பணி.

    ReplyDelete