Search This Blog

Monday, October 18, 2010

உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்


கணிப்பொறி பயிற்சியில் சிஎஸ்சி கப்யூட்டர் எஜுகேஷன் நிறுவனம் தன்னுடைய 25 ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இந்த 25 ஆண்டு விழாவில் புதுக் குடித்தனமாக புது இளமையுடன் பிரம்மாண்ட அலுவலகத்தை வளம் கொழிக்கும் திநகரில் கட்டியுள்ளது. சிஎஸ்சியுடன் நிர்வாக இயக்குநராக தென் தமிழ்நாட்டை சார்ந்த அய்யம் பெருமாள் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் சிறப்புற பணியாற்றி வருகிறார். தன்னுடைய பிரம்மாண்ட கணினி அலுவலகத்தை 1986ல் சிஎஸ்சியின் முதல் கிளையான, வண்ணாரப்பேட்டையில் படித்த பழைய மாணவர் சந்தோஷை வைத்து திறந்து வைக்கிறார். பிரபல அறிஞரோ, அமைச்சரோ திறந்து வைக்க வேண்டிய கணினி வளாகத்தை மாணவனை திறந்து வைத்து மனம் மகிழ்ந்து உள்ளதென சிஎஸ்சி நிர்வாகத்தை சொல்லலாம்.

No comments:

Post a Comment