
தமிழ் மரபு அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு விழா சென்னையிலுள்ள மீனாட்சி பவன் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். திருமதி.சீதாலட்சுமிக்கும், பத்மாவதிக்கும் பாராட்டு செய்யப்பட்டது. அருமையான மூன்று சொற்பொழிவுகளை திரு.ராமச்சந்திரன், திரு.ராஜவேலு, திரு.செல்வராஜ் ஆகியோர் வழங்கினர். தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளை ஜெர்மனி சுபாஷினிட்ரெம்மல் விளக்கினார். தமிழ் மரபு அறக்கட்டளையின் வருங்கால திட்டங்களை நான் பட்டியலிட்டு விளக்கினேன். தினமணியில் தமிழ் மரபுப்பணி குறித்த தேவைகளும், விழா சிறப்பு குறித்தும் அருமையான கட்டுரைச்செய்தி வெளியானது.
No comments:
Post a Comment