Search This Blog

Tuesday, January 31, 2012

கிராபிக்ஸ் விருதுப் போட்டி

என்னுடைய நிறுவனம் ஆண்டுதோறும் கிராபிக்ஸ் விருதுப்போட்டியை நடத்திவருகிறது. இவ்வாண்டு கிராபிக்ஸ் விருதுப்போட்டி சென்னை தி.நகரில் 28ந் தேதி (சனிக்கிழமை) நடத்தியது. நிகழ்ச்சியில் தமிழக அரசின் திட்டக்குழு செயலர். திரு தனவேல் ஐஏஎஸ், இயக்குநர்-நடிகர் பொன்வண்ணன் மற்றும் மொழி பெயர்ப்புத்துறை இயக்குநர்.
முனைவர். அருள்நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  9 வது கிராபிக்ஸ் விருதுப்போட்டியில்  பாளையங்கோட்டையைச் சேர்ந்த திரு.பி.ராஜன் முதல் பரிசை பெற்றறார்.







Friday, January 20, 2012

தமிழ்க் கணினி கருத்தரங்கு

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும், இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்துதமிழ்க் கணினிமொழியியல்பயிலரங்கை 11 நாட்கள் நடத்தி வருகிறது. இதன் துவக்கவிழா எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் 20ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது. தலைமை உரையை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் ஆற்ற, மைசூர் சிஐஐஎல் இயக்குநர் முனைவர் எல்.இராமமூர்த்தி மையக் கருத்துரை  வழங்கினார். 


எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையை அரசு முதன்மை செயலாளர் திரு.ம. குற்றாலிங்கம் அவர்கள் ஆற்றினார்கள். கணித் தமிழ்ச்சங்க தலைவர் ஆண்டோ பீட்டர், முனைவர் .தெய்வ சுந்தரம், மணிமணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி பட்டறையில் தமிழ்க்கணினி கருத்துரை ஆற்ற 28 அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். 100 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

21.1.2012 : தினமணி புகைப்படம் காண்க:





மா.ஆண்டோ பீட்டரின் நூல் வெளியீடு

15.1.2012 மாலை 5 மணிக்கு , சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில் மின்தமிழ் நண்பர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் என்னுடைய சாப்ட்வியூ பதிப்பக வெளியீடான SHORTCUT KEYS என்ற நூலினை சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் வடிவேல் நாகராஜள்  வெளியிட, ஜெர்மணி சுபாஷினி ட்ரெம்மல்  பெற்றுக்கொண்டார்.